×

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஏப்.16: ராமநாதபுரத்தில் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 6 மாதங்களாக வழங்கப்படாத உணவு மானியத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியமாக மாதம் ரூ.6750-ம், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு கருப்பு உடை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கணேசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட துணைத்தலைவர் மூக்கூரான் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

The post பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Nutrient ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...